பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-07-27 11:11 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் இருந்து பெரியாக்குறிச்சி இடைக்கலம்பூர் வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பஸ்சின் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ்சை பழைய வழித்தடத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்