அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பழையமேட்டூர் மற்றும் புதுமேட்டூர் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் கால்கடுக்க பஸ்சுக்காக காத்து நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பழையமேட்டூர், புதுமேட்டூர் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.