பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை ஓரத்தில் வாகன ஓட்டிகள் தங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.