மாடுகள் தொல்லை...

Update: 2025-07-20 08:14 GMT

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் அதிகளவில் மாடுகள் நடமாடுகின்றன. இதனால் பள்ளி-கல்லூரி முடிந்து வீடும் திரும்பும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. மேலும், மாட்டின் உரிமையாளர்கள் சாலைகளில் மாடுகளை கட்டிவைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த மாடுகளால் ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்