சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?