நெய்வேலி- பண்ருட்டி சாலையில் காடாம்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் சாலை விரிவாக்க பணிக்காக அமைக்கப்பட்டுள்ள பில்லரில் உள்ள இரும்பு கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையை நோக்கி வெளியே நீட்டிக் கொண்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து இரும்பு கம்பிகளை சரிசெய்ய வேண்டியது அவசியம்.