உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் இருந்து நகருக்கு செல்ல ஒருவழிப்பாதை செல்கிறது. இதில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி அவ்வழியே வருகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.