பயணிகள் அவதி

Update: 2025-06-29 14:21 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் மேம் பாலத்திற்கு கீழ் உள்ள இடத்தில் சேலம், நாமக்கல், வேலூரில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் நகர பஸ்கள் இங்கு நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் நின்ற பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் அமர முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேலாயுதம்பாளையம் மேம்பால பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்