சரியான நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-06-29 12:24 GMT

சென்னை திருவேற்காடு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக்கொண்டு சரியான நேரத்தில் பஸ்களை எடுப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் தினம் வாக்குவாதம் தான் நடக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் பலர் அவதி அடைந்து வருகின்றனர். பல மாதங்களாக இதே நிலை தொடர்கிறது. எனவே, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்