பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருதையன் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் ஏராளமான பயணிகள் அரியலூர், அகரம்சீகூர், திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் முதியவர்கள் அமர இருக்கைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.