கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அதனை இடித்துவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பணி கடந்த 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் பஸ் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.