பஸ் வசதி வேண்டும்

Update: 2025-06-29 11:43 GMT

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து சென்னைக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லை. இதனால் கொப்பம்பட்டி சுற்றி உள்ள கிராம பகுதி மற்றும் திருச்சி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிராம மக்கள் சென்னை செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பல பஸ் மாறி செல்வதால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பகல் மற்றும் இரவு நேரத்தில் துறையூரில் இருந்துசென்னைக்கு நேரடி பஸ் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்