ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராம தீர்த்தம் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலையில் எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நிறைந்த அச்சாலையயை கடக்க மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும்.