ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர்-பாக்கம் வரை திருவண்ணாமலை செல்லும் சாலையில் தொழுவந்தாங்கல் ஏரிக்கரை மேல் செல்லும் சாலையில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.