வாசுதேவநல்லூர் வண்ணாரமாடசாமி கோவில் முன்பு கருப்பையாற்று பாலம் குறுகலாக உள்ளது. அந்த வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பாலத்தை அகலப்படுத்தி கட்ட வேண்டும். மேலும் பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும், பாலத்தில் கிடக்கும் மண்குவியலை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.