ராமநாதபுரம் அரண்மனை, சாலை தெரு, சிகில் ராஜ வீதி, அக்ரகாரம் ரோடு போன்ற பகுதிகளில் வாகனங்களை சாலையில் இருபுறங்களிலும் நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்து போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.