கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து சாமளாபுரம், மங்கலம் வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் சென்று திரும்பும் 5, 5A, 5B, 5C, 5D, 14 ஆகிய எண் கொண்ட நகர்புற பஸ்கள் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வரும் வகையில் நீட்டிக்க வேண்டும். ஏனென்றால், அங்குதான் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நகராட்சி அலுவலகம், நகர்ப்புற சுகாதார மையம், சமுதாய கூடம், அரசு நூலகம், தேசியமயமாக்கபட்ட வங்கிகள், அரசு போக்குவரத்து கழக கருமத்தம்பட்டி கிளை உள்ளிட்டவை உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மேற்கண்ட பஸ்களை நீட்டிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.