திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூரில் இருந்து பாலகிருஷ்ணம்பட்டி செல்லும் சாலையோரம் மண் குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் 2 நான்கு சக்கர வானங்கள் சாலையை கடக்கும் போது, சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மண் குவியலில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரிய அளவிலான விபத்து நடக்கும் முன் இந்த மண் குவியலை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.