ஈசாந்திமங்கலத்தில் இருந்து தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை உள்ளது. மிகவும் குறுகலாக காணப்படும் இந்த சாலையின் ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு நடுகல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பலர் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் நடுகல்லை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமது யூசுப், இடலாக்குடி.