விபத்து அபாயம்

Update: 2025-06-15 15:57 GMT

கரூர் மாவட்டம் கரைப்பாளையம் முதல் நொய்யல் வரையிலும் தார் சாலை நெடுகிலும் விவசாயிகள், நெடுஞ்சாலை துறையினர் தென்னை மரங்களை நட்டு வைத்துள்ளனர். இதனால் அவ்வப்போது எதிர்பாராத விதமாக இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கார்கள் மீது தென்னை மட்டைகள், தேங்காய்கள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்