வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-06-15 13:48 GMT

கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் ஊராட்சி, தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்வதற்காக வேலாயுதம்பாளையம், பாலத்துறை மற்றும் பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் பள்ளம் மூடப்பட்டு உள்ளன. ஆனால் தார் சாலை அமைக்கப்படாமல் அப்பகுதி மண் சாலையாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழாய் பதிக்குப்பட்டுள்ள பகுதி மேடு பள்ளமான உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்த காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்