சென்னை பிராட்வேயில் இருந்து அஸ்தினாபுரத்திற்கு 52 பி பஸ் 4 இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒன்று மட்டும் தான் ஓடுகிறது. தலைமைச் செயலகம் வழியாக செல்லும் 152 பிராட்வே பேருந்து இயக்கப்படவில்லை. சிட்லபாக்கம் பிராட்வே இடையே இயக்கப்படும் பேருந்து செல்லவில்லை. இப்படி பல வழிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்றி பஸ் சேவையை இயக்க வேண்டும்.