பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படாமல் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.