ராமநாதபுரம் ரோமன் சர்ச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அச்சாலையை கடக்க கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் நலன் கருதி மேற்கண்ட சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?