திருச்சி மெயின்கார்ட் கேட் நுழைவு வாயில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.