தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-06-08 09:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கு இரவு நேரத்தில் எரியாமல் உள்ளதால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்து இருந்த மின் விளக்குகளை சரி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்