எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

Update: 2025-06-08 09:43 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பாதையில் இருந்து குன்னம் செல்லும் சாலையில் சில இடங்களில் சாலை ஆபத்தான வளைவாக காணப்படுகிறது. இந்த வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படாமல் உள்ளதால் வெளியூர் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்