சென்னை, மணலி-பாரிமுனை இடையே (64 சி,44 சி) என்ற வழித்தட எண்ணில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் பஸ்கள் பெருமளவில் இயக்கப்படுவதில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பஸ்களுக்காக நீண்டநேரம் காத்திருக்கும் நிலை இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இந்த வழித்தடத்தில் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, தடம் எண் (29 டி, 29 சி) வழிதடத்திலும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.