சென்னை மாதவரம் தபால் பெட்டி அடுத்த எம்.எம்.சி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதன் அருகிலேயே பாதாள சாக்கடையும் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்வதுடன், பாதாள சாக்கடையையும் சரிசெய்ய வேண்டும்.