சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள முத்தியாலு செட்டி தெரு, சதாசிவம் தெரு, சுந்தரம் பிள்ளை சந்து ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ-மாணவிகள் அச்சமடைகிறார்கள். இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.