சீராக பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-06-01 10:11 GMT

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மாவட்டம் செட்டிகுளம் கிராமத்திற்கு 3 ‘பி’ அ ரசு மகளிர் விடியல் பஸ்சாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக அந்த பஸ் சீராக இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்,வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன்கருதி மகளிர் விடியல் பஸ்சை சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வன், செட்டிகுளம்.

மேலும் செய்திகள்