உடுமலையில் இருந்து திருப்பூர், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் அரசு பஸ்களில் ஒருசில டிரைவர்கள் பஸ்சை இயக்கியவாறு செல்போனில் பேசுகிறார்கள். இதனால் விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளது. அதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே பஸ் ஓட்டும் டிரைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இதை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.