புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில் அளவுக்கு அதிகமாக லாரிகளில் தேங்காய் உரி மட்டைகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் உரசி தேங்காய் உரி மட்டைகள் சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தேங்காய் மட்டைகள் மீது வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.