சிதிலமடைந்த பாலம்

Update: 2025-05-25 11:34 GMT

கரூர் மாவட்டம், வெங்கமேடு, செங்குந்தநகர் 3- வது தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் வாய்க்காலின் மேல் பகுதியில் சிறிய அளவிலான பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் மேற்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தை இந்த பாலத்தின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் இதில் தட்டுதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்