கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே ஈரோடு- கரூர் செல்லும் தார் சாலையில் ஒரு தனியார் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலை அருகே பயணிகளின் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் நின்று பயன் அடைந்தனர். இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளை மர்மநபர்கள் எடுத்துச்சென்றுவிட்டனர். இதனால் பயணிகள் அமர முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் இந்த நிழற்குடையில் அமர்ந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.