சத்தியமங்கலத்தில் இருந்து 4, 4பி, 11 என்ற அரசு டவுன் பஸ்கள் கள்ளிப்பட்டி, அத்தாணி வரையே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் பயணிகள் அத்தாணியில் இறங்கி நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். இதன் காரணமாக பண மற்றும் கால விரயமாகிறது. இதை தவிர்க்க சத்தியமங்கலம்-அந்தியூர் இடையே பஸ்கள் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.