போக்குவரத்து நெரிசல்

Update: 2025-04-27 11:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதி மற்றும் உழவர் சந்தை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவாகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழி நகர் பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்