சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகளில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.