சீரான பஸ்வசதி தேவை

Update: 2025-04-13 07:20 GMT

குமரி மாவட்டத்தின் கிராமபுறங்களில் இருந்து திங்கள்சந்தை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் வேலைக்காக வந்து செல்கின்றனர். அதன்படி திங்கள்சந்தை-நாகர்கோவில், திங்கள்நகர்-கருங்கல் ஆகிய வழித்தடங்களில் இரவு 8.30 மணிக்கு பிறகு பஸ்கள் சீராக இயக்கப்படுவதில்லை. இதனால் இரவில் கடைகளில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் சீரான பஸ்வசதி ஏற்படுத்திட வேண்டும்.


மேலும் செய்திகள்