அரியலூர் மாவட்டம், திருமானூர் முதல் புள்ளம்பாடி வரை பள்ளி மாணவ-மாணவிகளுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் அதிகளவில் மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் ஏறி செல்கின்றனர். இதில் பல மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே திருமானூர் முதல் புள்ளம்பாடி வரை காலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், படிக்கட்டுகளில் தொங்குபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.