பவானியில் இருந்து ஈரோடு வரும் பஸ்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அவசரமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக கீழே விழுந்து காயம் அடைய வாய்ப்பு உள்ளது. சில நேரம் உயிரிழப்புகளும் ஏற்படலாம். இதை தவிர்க்க அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.