புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், மதியநல்லூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் எதிர்புறம் நெடுஞ்சாலைத்துறையினரால் போடப்பட்ட வேகத்தடையும் உள்ளது. இந்த சாலையானது புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் மெயின் சாலையாக இருப்பதால், இரவும், பகலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் செல்கிறது. ஆனால் இங்கு சாலை பாதுகாப்பு எச்சரிக்கை சின்னங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.