அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பரமார்த்தலிங்கபுரம் இ.பி.காலனியின் பின்புறம் உள்ள சாலையில் கட்டிட கழிவுகள் உள்பட பல தரப்பட்ட கழிவுகளை சிலர் கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்றி விட்டு சாலையை முறையாக சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.