தஞ்சை ரெட்டியார்பட்டி சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உலா வரும் கால்நடைகளால் பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.