ஆயக்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் தோட்டத்து வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். அதேபோல் வரதாப்பட்டினம் அருகில் விசேஷ நாட்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஆயக்குடி-வரதாப்பட்டினம் இடையே மினிபஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே ஆயக்குடி-வரதாப்பட்டினம் இடையே அரசு பஸ் சேவை தொடங்க வேண்டும் போதிய வருவாய் இல்லை என கூறி மின்பஸ்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டனர். அதேநேரத்தில் பஸ் சேவை இல்லாததால் மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு பஸ் இயக்க வேண்டும்.