கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Update: 2025-03-02 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள துவார் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. மழையூர், சம்பட்டிவிடுதி, வடவாளம், புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ - மாணவிகள் காலை மற்றும் மாலை வேளையில் இந்த பஸ்சில் தான் செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். பெண்கள் உள்ளிட்ட மற்ற பயணிகள் பஸ்சில் ஏற முடியாத நிலை உள்ளது. எனவே இந்த வழிதடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி