சூலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் காந்திபுரத்தில் இருந்து சூலூர் வழியாக குமாரபாளையம் வரை 41டி என்ற நகர்ப்புற பஸ் மற்றும் காந்திபுரத்தில் இருந்து சூலூர் வழியாக கோம்பக்காட்டுபுதூர் வரை 19ஜே என்ற நகர்ப்புற பஸ் ஆகியவை இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை சோமனூர் பஸ் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள். மேலும் போக்குவரத்துக்கழகத்துக்கும் வருமானம் அதிகரிக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?