கள்ளக்குறிச்சி பஸ் பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சில நேரங்களில் அங்கு நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்து பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை தொடர்கிறது. குறிப்பாக முதியவர்கள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அமர முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.