கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் ரோட்டில் மோளையாண்டிபட்டி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தகரத்தினாலான நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது அந்த நிழற்குடை மிகவும் சிதிலமடைந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகிறார்கள். இங்கு நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.