பஸ்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2025-01-19 14:17 GMT
சிறுபாக்கத்தில் பயணிகளின் தேவைக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் பஸ்கள் அனைத்தும் சாலையிலேயே பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே பஸ்கள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் சென்று வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்